அரிகண்டம், தில்லைக்காளி தேர் ஓடியது





பக்கம் 34 - சிதம்பரத்தில் கவீசுவராள் வந்து பாடினது

வனத் தீசாருள் தெய்வ மெனுங் கற்பகத்தான் கல்வி தருவார் தமக்கு நீ காப்பூ - உ

 

தில்லைநாயகி யம்மன் கோவில்

பாகை யில் மேலு பழய தரையன் - ஈகை சோ பிள்ளை யில்லை.  ஆகையினால் - சிதம்பரத்தே வந்து சிவகங்கை மூழ்கி - யிதம் பெருபூசை[1] ஏற்றிப் பணிந்து “மைந்தரைத் தாரும்”, மறுபடி வந்து - நந்த, நின் பெயரைச் சாத்துவேன்[2] என்று ப(ங்)குயினில்[3] ஏகப்[4], பாலன் பிறக்க, யேதிர் இல்லாப் பிராயம்[5] ஈரெட்டாக[6], சீர் பெரும்புலியூர் தில்லையில் வந்து பெரும் வீரப்பெருமாள் என்று பெயரிட்ட பின்பு ஊருக்குச் செல்லும் நாள் -- தில்லைநாயகிக்கு திருவிழா அல்லவோ எல்லோரும் காப்பில்[7] அகப்பட்டோமே, ஊருக்குப் போக ஒண்ணாது என்று என மிகு தலத்தில் இருக்கு(ம்) நாளில், அடா பெருந்தில்லை அம்மை திருத்தேர் படர்ந்து வரச்சே[8], பருத்திக் குடையான் கோடியில் ஆ

 பக்கம் 35 -தில்லைநாயகி யம்மன் கோவில்

            ழி[9] ஓடிப் புதைய, கோத் தரு மிக ப(க்)த்தரும் இழுத்து - கையும் சோர்ந்தார் - மெய்யும் சோர்ந்தார் - என்ன காரணமோ - ஏது காரணமோ - தில்லை நாயகியே சொல்லு நீ யம்மாள் - இன்னலங் குழாலாள் பிராமணப் பெண் மேல் சன்னதம்[10] வந்து தலை சுத்தி ஆடி ஒரு தாய்க்கு ஒரு மகன் - யோடல்[11] மறு விலைனாய்[12] 

            அரிய[13] கல்வியறிவு உடையத்(தவ)னுமாய் மறை பிரண்டு[14] நிற்கும்படி இல்லாதவனாய், மானிடன் ஒருவன் தனைப் பிலி[15] கொடுத்தால்  ஓடுந் தேரே, என்று உறுதியாய் உரைக்க, நாடுஞ் சோழனாபதி[16] அறிந்து வின்னம்[17] இல்லாத பிள்ளை ஓர்தட்டு[18] சுவர்ணம்[19] ஓர்தட்டு தூக்கித் தருவேன்[20].  பாலனோ தட்டு பத்தத் தனை பொன்[21] கோலி[22] தூக்கி[23] கொடுப்பேன் என்று யுறமுறை[24] பறையறையவும்[25] சொல்லி “தனம் வரும், ஒத்து(த்) தா[26]” என்று கேட்டு மனம் பொருமுத்து[27] வருவார் இல்லை.   ஆண்டவா,  சைவ அந்தணர், பெரியோர், மூன்று நாள்ப் பசித்து

 

பக்கம் 36 -தில்லைநாயகி யம்மன் கோவில்

ருசித்திடு நாள் இத்தனை பேர் உயிரை யருந்தால் ப(க்)த்தியாய் இருக்கும் பாரமிக கிரங்கி வீராதி வீரன், வீரவாகு, விகுர்தகுல குலத்தான், வீராணம் ஏரி மேல்நிலை கண்டவன், வீரவல்லாளனை வேரை யுத் தண்டன், - வீர செகண்டி மௌம் படைத் தோன், - சதுர்யன், பழயன், தரையன், குமாரன், விதரண[28] போசன், வீரப்பெருமாள் - காறோடாத[29] காலங்கள்ப் போலே தேரோடாத்  சேதி[30] அறிந்து “பார் மேல் வாழ்வு நீர் மேல் குமுளி”, உறங்கி விழிப்ப இறந்து பிறப்புதல் போலே, பத்தில்[31] புகழ் உண்டு எனக்கு, சாவில்லை, என்று தனம் ஏதெண்ணி[32] தாயாரிடத்தில் தந்தையாரிடத்தில் வந்து பணிந்து, யுர மண்ணாட்டுண்டு[33] தாரீரோ என, தந்தோமென்ன[34], போர்த் தேருக்குப் பிலியாவேனே[35] என்றார். காச்சிய செம்பை[36] காதில் ஊத்தது போல் பேச்சை வினவி, பேயி பிடித்தவர் போல் வருந்தி வருந்தி, மயங்கி மயங்கி இருந்தவரைப் பார்த்து, ஏதுக்குத் துயரம், பிணி இறந்தால் விலக்கப்படுமோ, வேணு மனபத

 

பக்கம் 37 -தில்லைநாயகி யம்மன் கோவில்

Parallelogram: இந்தப் பகுதி கிடைக்கவில்லைனில் விலக்க வொண்ணாது, பிலி கொடுப்பவரை பிரண்டேன்[37] ஆகில், பிலி கொடுப்பவரை பழித்தவா போலு குலத்திரி சங்கங் கூடாதிருந்து பாஷதிரி சங்கம் பண்ணி நீர் போலும் றந்தவர் போலும் கோ

விலகா ண்ணி லிருந்து

வழ ந்தனாயன் போ

லு நெ      லுபதேச மற

ந்த சீஷ-போர் தம்மை

தடுப்போர் போ அவர் சொல்லும்

வழிக்குப் போவேன், தினவெளிப் பிரப்படுங்[38] காலில், சோழராசன் துரிதமாய் வந்து காளையை நோக்கி கண் களிகூர்ந்து பிறந்த தாய்க்கும் பிதாவுக்கும் கொடுக்க, நறநற என நெரிய நிழத்தும் போது, திரவியம் இவர்க்குத் தேவை யில்லை, இரவியும் மதியும் இருக்கும் நாள் அளவில் நில் வெறுங் கீர்த்தி நிருத்தித் தாரு அலை கடர் புலியாளர் சனி யென்று “வேண்டிய வகை நீர் விளம்பு”[39] நீரென்ன ஆண்டவனே அண்ணலே குலதுகுத்தோர்[40] சேணைத் தலைவா, தேர் உருளுரு(ம்) மிக்க மான -

 

பக்கம் 38 -தில்லைநாயகி யம்மன் கோவில்

த்தார், எங்கள் மடத்துக்கு  மேற்கு எழுபது மனையும் இரண்டு சர்கில்[41] அழகுட நிற்க, அருள் செய்யு(ம்) அப்பால் “சேலை நோய் விழியாள்” தில்லைனாயகி தன்னாளை, அந்தணனை அடியேன் போலே சிலையும் பண்ணி, திருவுருக் கொண்டு யொல்லை சேர்த்து உதவிடுமென்ன, எங்கள் மரபில் எவர் இறந்தாலும் மங்களகமாய் மாலை சந்தனம் இடப் பரிவட்டம் வெண்ணீருடனே யடா பெருந் தில்லை அம்மை சன்னதியில் கொண்டு வந்து அன்பால்க் குடுக்கவே வேணும், விண்டு[42] வந்து அருளும் மேலைக் கோபுரகடி[43] கமிழராசன்[44] படியது மிரித்து[45] முன்பாவாடை பின்பாவாடை நடபாவாடை, இடை விடாதறந்து[46] தொன்று கைக்குளா[47] மூன்றாம் தெருவில் சேர நடந்து, கெங்க மோட்டில்[48], யாரும் சுடாத காடதுதா(ன்)[49] வேணும் என்றும் வீரப்பெருமாள் இசைத்திட, சுந்தரச்சோழன் தந்தோமென்ன[50] சொன்ன மொழிக்கு, தன் மனம் குளிர்ந்து, சின்மயமான சிவகங்கை மூழ்கி தனம் தானம் சாலவே[51] வழங்கி, சிலனுதர[52] காளி தேரிற்(கு) எதி

 

பக்கம் 39 -தில்லைநாயகி யம்மன் கோவில்

ரே சிறப்புடன் வந்து என் பேர் நினைக்க, எங்கும் தேரோட, சூர் கை வாளை துகயல்[53] போதாது என்று வாழைக்காயை வெட்டு வழின[54] கழுதின் ஆழப் புதைத்தார், அரும் பிலி கொடுத்தார்.  அப்போ தில்லை மா காளி திருவிழமகிழ்ந்து மலரேடுமங் கொடுத் தேர்[55] மாநிலத்து ஓடி, நிலையினில் வந்து நின்றிடும் போது, மன்னவன் சோழன் - மனம் களி[56] சிறப்பாப் பாய சாத்திய சேணை தலைவர் தன் குலத்திர் நால்த் திசையுள்ளோர்[57] நாடோறும் வழி மங்களத்துடனே மைந்தரைப் பெற்று, பொங்கிய செல்வம் பொருந்தியே வாழி, நாடக முத்தமிழ் நாடோறும் வாழி - இந்தப்படி வெள்ளாளர் தில்லையம்மன்  கோவில்  மெய் காப்பாளர்களில் “சிவதாண்டவ பண்டாரம்” சொல்படி எழுதினிது - உ

 



[1] பெரிய பூசை

[2] உன்பெயரை வைப்பேன்

[3] பகுனி = பங்குனி? (பங்குனியில், பங்குனி மாதத்தில்,)

[4] செல்ல

[5] பிராயம் = வயது

[6] ஈரெட்டாக = 2 x 8 = 16 ஆக

[7] காப்பு = திருவிழாவிற்குக் காப்புக் கட்டுவார்கள்.  காப்புக் கட்டிய பின்னர் காப்பு அவிழ்க்கும்வரை ஊரை விட்டு வெளியே செல்ல மாட்டார்கள்.

[8] வரும்போது

[9] ஆழி = சக்கரம், தேர், தேர்ச்சக்கரம்,

[10] அருள் வந்து ஆடுதல், சாமியாடுதல்,

[11] யோடல் = உடல்

[12] உடலில் மறு இல்லாதவனாய், உடற்குறைபாடு இல்லாதவனாய், மாசுமறுவற்றவன்என்பது பேச்சுவழக்கு

[13] அரிய = உயரிய

[14] பிரண்டு = பிரளுதல், புரளுதல், மறைபிண்டு = வேதநெறியிலிருந்து பிரளாதவனாய்,

[15] பிலி = பலி, உயிர்ப்பலி,

[16] சோழ மன்னன்

[17] வின்னம் = பின்னம், ஒச்சம், உடலில் குறை,

[18] ஓர் தட்டு = துலா(தராசு)வில் ஒருபக்கம் உள்ள தட்டு

[19] சுவர்ணம் = தங்கம், சொர்ணம்.

[20] பிள்ளையைத் தராசில் வைத்துப் பிள்ளையின் எடைக்குச் சமமான தங்கம் தருவேன்

[21] பொன் = தங்கம், சொர்ணம்.

[22] கோலி = துலாக்கோல், தராசு

[23] கோலி தூக்கி = துலாக்கோலில் (தராசில்) வைத்துத் தூக்கி (பலி கொடுக்க முன்வருபவனின் எடைக்குச் சமமான எடையுள்ள தங்கம் கொடுப்பேன்)

[24] யுறமுறை = ?

[25] பறையறைவும் = பறையடித்துப் (தண்டோராப்போட்டுப்) பொதுமக்களுத் தெரியப்படுத்தவும்

[26] ஒத்துத் தா = ஒத்துக கொண்டு பலி கொடுக்க இளைஞன் ஒருவனைத் தாருங்கள் (என்று)

[27] மனம் ஒருமித்து

[28] விதரணம் = கொடை, ஈகை.

[29] காறோடாத = கார்(மேகம்) ஓடாத

[30] சேதி = செய்தி, தகவல்

[31] பத்தாம் வயதில்

[32] ஏதெண்ணி = ஏது எண்ணி, காரணம் நினைந்து,

[33] மன்றாட்டு, மன்றாடுதல்,

[34] தந்தோம் என்று

[35] பலி ஆவேன்

[36] செம்பை = செம்பு உலோகத்தை

[37] பிரண்டேன் = மாறுபடுவேன்

[38] பிரப்படுங் = புறப்படுங்

[39] நீர் விளம்பு = நீங்கள் சொல்லுங்கள்,

[40] குலது கு(டு?)த்தோர் = குலது கொடுத்தோர்? = குலத்தைக் கொடுத்தோர்?

[41] சர்கில் = circle ?

[42] விஷ்ணு, மகாவிஷ்ணு, பெருமாள்,

[43] கோபுர அடி?

[44] தமிழராசன்?

[45] மிரித்து = மிதித்து?? பிரித்து??

[46] இடைவிடாது திறந்து?

[47] ஒன்று கைக் கொள்ளா

[48] கெங்க மோட்டில் = கங்கை மேட்டில்?? (மோடு = வீட்டின் மேற்கூரை?)

[49] யாரும் சுடாத காடு அதுதான் வேண்டும்,  (புதிதாய்ச் சுடுகாடு வேண்டும்)

[50] தந்தோம் என்று

[51] கூடுதலாக (சால மிகுத்துப் பெயின் - திருக்குறள்)

[52] சிலன் உதர? சிவன் உதர?

[53] துகயல் = தேய்த்தல் ( சாணையிடுதல், கூர்மை செய்தல்)

[54] வெட்டுவது போன்று ?

[55] திருவுள்ளம் மகிழ்ந்து மலர்ஏடும் கொடுத்து தேர்?

(மலர் ஏடு பார்த்தல் = பல வண்ணங்களில் பூக்களைத் தனித்தனியாகபூக்கட்டிப் போட்டுத் திருவுள்ளம் கேட்டு அறிதல்)

[56] மனம் மகிழ்ந்து,

[57] நான்கு திசைகளிலும் உள்ளோர்

Comments

Popular posts from this blog

கதிர்காமத்தில் தங்கத்தால் கோயில் கட்டிய தமிழன்