கதிர்காமத்தில் தங்கத்தால் கோயில் கட்டிய தமிழன்
பட்டிணத்தாரின் வளர்ப்பு மகன் மருதப்பர் ஈழத்திலே கதிர்காமத்தில் தங்கத்தால் கோயில் கட்டியது தமிழகத்தில் உள்ள அறுபடைவீடு கோயில்களுக்கு நிகரான திருத்தலமாக யாழ்ப்பாணத்தில் உள்ள கதிர்காமம் உள்ளது. கதிர்காமத்தில் ஓடு வேயப்பட்ட கோயில்களே ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் இருந்ததாக அறியமுடிகிறது. ஆனால் பட்டிணத்தாரின் வளர்ப்பு மகனான மருதப்பர் ஈழத்திலே கதிர்காமத்தில் தங்கத்தால் கோயில் கட்டினார் என்று பட்டிணத்தாரின் வாழ்க்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கதிர்காமத்தில் இருந்து மருதப்பர் வாங்கி 500 கப்பல்களில் ஏற்றிக் கொண்டு வந்த எருவிராட்டிகளில் இருந்த தங்கமே இருந்தது. இது கண்டு மருதப்பரின் தந்தையாகிய பட்டிணத்தாரும், அவரது தாயாரும் மற்றும் பூம்புகாரில் வசித்த அனைத்து வணிகர்களும் வியந்து மலைத்துப் போயினர். பூம்புகாரில் வாழ்ந்த அனைத்துச் செல்வந்தர்களின் ஒட்டுமொத்த செல்வத்தை விட இது அதிகாக இருந்ததாம். கதிர்காமத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இங்கு கருவறைக்குள் என்ன உள்ளது என்று யாரும் அறியார். கர்ப்பக்கிரகத்தைத் திரையிட்டு மறைத்திருக்கிறார்கள். கர்ப்பக்கிருகத்தின் கதவைக்கூட அடியார்க